மயில்கள், ஆண்மயிலின் ஆடம்பரமான தோகைக்காகப் பெயர் பெற்றது. ஆண்மயில் பெண்ணைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும். ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான, நீலம் கலந்த பச்சை நிறமுடையவை. தோகையில் வரிசையாகக் 'கண்' வடிவங்கள் உள்ளன. தோகையை விரிக்கும் போது இவை மிகவும் அழகாகத் தோற்றமளிக்கின்றன. பெண் மயில்களின் உடல் மங்கலான பச்சையும், பளபளப்புக் கொண்ட நீலமும், பச்சை கலந்த சாம்பல் நிறமும் கலந்தது. நீண்ட தோகை பெண் மயில்களுக்குக் கிடையாது.
இந்திய மயில் (பேவோ கிறிஸ்ட்டாட்டஸ் - Pavo cristatus), இந்தியாவையும், இலங்கையையும் சேர்ந்தது. பச்சை மயில்(பேவோ மியூட்டிக்கஸ் - Pavo muticus), மியன்மார் கிழக்கு தொடக்கம் ஜாவா வரையுள்ள பகுதியில் வாழ்கின்றன. IUCN, பச்சை மயில்களை, அழியும் அபாயமுள்ளவையாகப் பட்டியலிட்டுள்ளது. வேட்டையாடுவதாலும், உகந்த வாழிடங்கள் குறைந்து வருவதாலும் இவ்வபாயம் உள்ளது. இரண்டு இனங்களும் இனக்கலப்புக்கு உள்ளாகக் கூடியவை.
இலக்கியத்தில் மயில்:
“பூஞ்சினை யிருந்த போழ்கண் மஞ்சை-
-
-
-
- -குறுந்தொகை 391”
-
-
-
சுவையான தகவல்கள் :
- மயில் இந்தியாவின் தேசியப்பறவை ஆகும்.
- ஆங்கிலத்தில் Peacock எனப்பெயர் வரக் காரணம் : தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து மயில் தோகையை இறக்குமதி செய்து வந்தனர் அரேபியர். தமிழ் தோகை, அரபிய மொழியில் tawus ஆகியது. அங்கிருந்து கிரேக்கத்திற்கு சென்ற மயில் தோகை, அங்கு pfau ஆக மாறியது. அது லத்தீன் மொழியில் பேவோ ஆக மாறியது. அதிலிருந்து ஆங்கிலத்தில் பேவ்எனவும், பின்னர் Peacock எனவும் மருவியது.
No comments:
Post a Comment